Monday 6th of May 2024 07:09:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஏழை நாடுகளுக்கு இதுவரை  வெறும் 0.3 வீத கொரோனா தடுப்பூசிகளே  பகிர்வு!

ஏழை நாடுகளுக்கு இதுவரை வெறும் 0.3 வீத கொரோனா தடுப்பூசிகளே பகிர்வு!


உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ள நிலையில் இவற்றில் 82 வீத தடுப்பூசிகள் உயர் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏழை நாடுகளில் இதுவரை வெறும் 0.3 வீத கொரோனா தடுப்பூசிகளே போடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர்த்துக்கல்லில் நடந்த சுகாதார மாநாடு ஒன்றில் இணைய நேரலை வழியில் பங்கேற்றுப் பேசும்போதே அவா் இவ்வாறு தெரிவித்தார்.

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பணக்கார நாடுகள் போட்டிபோட்டு தடுப்பூசிகளைப் போடும் நிலையில் ஏழை நாடுகளுக்கு போதுமான தடுப்பூசிகள் கிடைக்கவில்லை எனவும் அவா் தெரிவித்தார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE